sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : ஜூலை 14, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், பாலுார் சாலையிலுள்ள பெரிய பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, 13 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும், நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து, அதிக அளவில் புழுதி பறக்கிறது.

இந்த புழுதி பகுதி முழுதும் பரவி, மணல் குவியலாக குவிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, மணல் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு எரிச்சல் ஏற்பட்டு, தவறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன், சாலையில் பல இடங்களில், பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us