/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி
/
மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி
மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி
மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி
ADDED : பிப் 05, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை ரத்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர், 45. மின் வாரிய மானாமதி பிரிவு ஊழியர்.
இவர், நேற்று மாலை 4:20 மணிக்கு, நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராவிதமாக, கால் இடறி கீழே விழுந்தார். அதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.
பன்னீரின் மகன் குணசீலன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

