/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை
/
மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை
ADDED : ஏப் 24, 2025 09:15 PM
வண்டலுார்:வண்டலுார் அடுத்த மாம்பாக்கம், வேடமங்கலம் உள்ளிட்ட 13 பகுதிகளில், நாளை சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் விநியோகம் தடை செய்யப்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மறைமலைநகர் மின்கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைமலை நகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் துணை மின் கோட்டத்தில், வரும் 26ம் தேதி சனிக்கிழமையன்று மாதாந்திர பராமரிப்பு மற்றும் புதிய 110 'கே.வி., சுவிட்ச்' பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்துார், கீழ்கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை வெங்கபாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், ஓ.எம்.ஆர்., ஒரு பகுதி, சாத்தான்குப்பம் ஆகிய இடங்களில், மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.