/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
57 காவலர்களுக்கு பதக்கம் வழங்கல்
/
57 காவலர்களுக்கு பதக்கம் வழங்கல்
ADDED : பிப் 18, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில், 2024ம் ஆண்டிற்கான, காவலர் நற்பணி பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பங்கேற்று, காவலர்களின் அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய, 57 காவலர்களுக்கு, முதல்வரின் காவலர் நற்பணி பதக்கங்களை, அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காவல் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.