/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கத்தில் வரும் 30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
பெரும்பாக்கத்தில் வரும் 30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெரும்பாக்கத்தில் வரும் 30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெரும்பாக்கத்தில் வரும் 30ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 27, 2025 10:36 PM
செங்கல்பட்டு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, பெரும்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில், வரும் 30ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள், கல்வி சான்றிதழ் நகல்கள், பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் வர வேண்டும். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
மேலும் விபரங்களுக்கு, 044 - 27426020 - 93844 99848 - 94868 70577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.