/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் வேலைவாய்ப்பு தைலாவரத்தில் சிறப்பு முகாம்
/
தனியார் வேலைவாய்ப்பு தைலாவரத்தில் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 05, 2025 08:54 PM
செங்கல்பட்டு:தைலாவரத்தில், தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், வரும் 8ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாமை, வரும் 8ம் தேதி நடத்துகின்றன.
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இம்முகாம் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இந்நிறுவனங்கள், 5,000த்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு மற்றும் பி.இ., - ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் நகல்கள், சுய விவர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வர வேண்டும்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விபரங்களுக்கு, 044 -27426020, 94868 70577, 93844 99848 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.