sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேலை பெற்று தருவதாக மோசடி புதுப்பட்டினம் கவுன்சிலர் கைது

/

வேலை பெற்று தருவதாக மோசடி புதுப்பட்டினம் கவுன்சிலர் கைது

வேலை பெற்று தருவதாக மோசடி புதுப்பட்டினம் கவுன்சிலர் கைது

வேலை பெற்று தருவதாக மோசடி புதுப்பட்டினம் கவுன்சிலர் கைது


ADDED : பிப் 01, 2024 10:44 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம்:அணுசக்தித் துறையில் வேலை பெற்று தருவதாகக்கூறி, 6 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக, வி.சி., கட்சியை சேர்ந்த புதுப்பட்டினம் கவுன்சிலரை, போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பெரியார் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ்.

இவர்கள் இருவருக்கும், அணுசக்தி துறையின் போக்குவரத்து பிரிவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, புதுப்பட்டினம் ஊராட்சி, 11வது வார்டு உறுப்பினரான வி.சி., கட்சி பிரமுகரான தென்றல் கோபி என்கிற ஜெயகோபி என்பவர், 6 லட்சம் ரூபாய் பணம் வரை பணம் பெற்றுள்ளார்.

ஆனால், வேலை பெற்று தராமலும், பணத்தை திரும்ப ஒப்படைக்காமலும் இழுத்தடித்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது, இருவரையும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர்கள் கல்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், நேற்று முன்தினம் தென்றல் கோபியை கைது செய்து, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us