sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று

/

செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று

செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று

செங்கையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு தகுதிச்சான்று


ADDED : அக் 07, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 07, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,:செங்கல்பட்டில் தனியார் பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 28 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் செயல்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள், தங்களது நிறுவன வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

அந்த வகையில், இந்நிறுவனங்களைச் சேர்ந்த 29 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு செய்திருந்தனர்.

அதன் பின், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், பறக்கும் படை வட்டார போக்குவரத்து அலுவலர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கண்ட வாகனங்களை, நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், 28 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது.

ஒரு வாகனம் விதிமுறைகளை கடைபிடிக்காததால், தகுதிச்சான்று நிறுத்தி வைக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us