ADDED : ஏப் 01, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
திருப்போரூர் ஜும்மா மசூதியில் நேற்று, ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, ஒருவொருக்கொருவர் கைகொடுத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். கோவளம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தமீம் அன்சாரி தர்காவில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதேபோல் கேளம்பாக்கம், கானத்துார், மானாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் நேற்று, ரம்ஜான் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

