/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டில் திருத்தம் செங்கையில் நாளை முகாம்
/
ரேஷன் கார்டில் திருத்தம் செங்கையில் நாளை முகாம்
ADDED : அக் 09, 2025 10:38 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மறறும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
கீழ்க்கண்ட கிராமங்களில், ரேஷன் கடைகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், நாளை நடக்கிறது.
இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.