sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்

/

 'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்

 'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்

 'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்


ADDED : நவ 30, 2025 12:32 AM

Google News

ADDED : நவ 30, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வரின் 'தாயுமானவர்' திட்டத்தில், தகுதியுள்ள 33,745 பேருக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வரின் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், 841 நியாய விலைக்கடைகளில், 33,745 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு, வரும் டிச., 2ம் தேதி துவங்கி, 4ம் தேதி வரை, அவர்கள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

எனவே, தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தை பயன்படுத்தி, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us