sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

/

 செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

 செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

 செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


ADDED : நவ 28, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டு நாட்கள் மிக கன மழை எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, தேசிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், வரும் 29 மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 'ரெட்' மற்றும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளது. மாவட்டத்தில் மிக கனமழை மற்றும் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பாலாறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.

மேற்கண்ட நாட்களில், அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கவும். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, கலெக்டர் அலுவலகத்தில் அவசரகால காட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

புகார்களுக்கு தொலைபேசி எண்கள்: 044 - 27427412-14 மற்றும் 'வாட்ஸாப்' எண் 94442 72345 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். வெள்ள அபாயம், சேதம் குறித்த புகைப்படங்களை, வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.






      Dinamalar
      Follow us