sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காஞ்சியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை கைதான சிறுவன் வீட்டை சூறையாடிய உறவினர்கள்

/

காஞ்சியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை கைதான சிறுவன் வீட்டை சூறையாடிய உறவினர்கள்

காஞ்சியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை கைதான சிறுவன் வீட்டை சூறையாடிய உறவினர்கள்

காஞ்சியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை கைதான சிறுவன் வீட்டை சூறையாடிய உறவினர்கள்


ADDED : ஆக 12, 2025 11:04 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில், தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான சிறுவனின் வீட்டை உறவினர்கள் சூறையாடினர்.

காஞ்சிபுரம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு மகன் மாதவன், 21; இவர் மீது, காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் இரு வழக்குகள் என, மொத்தம் ஆறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாதவன் தன் வீட்டின் அருகே உள்ள பொது கழிப்பறை கட்டடம் மேல், இரவில் துாங்குவது வழக்கம்.

கடந்த வெள்ளிக் கிழமை வழக்கம்போல, கழிப்பறை கட்டடத்தின் மேல் துாங்க சென்றார். சனிக்கிழமை காலை வீட்டிற்கு மாதவன் வராததால், அவரது பெற்றோர், கழிப்பறை கட்டடம் மீது ஏறி பார்த்தனர்.

அப்போது, தலையில் பலத்த காயங்களுடன் மாதவன் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதவன், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இவ்வழக்கில், மாதவன் வீட்டருகே வசிக்கும் இளைஞர்களிடம் போலீசார் விசாரித்ததில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது.

மாதவனுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும், 17 வயது சிறுவனுக்கும், ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மாதவன் சிறுவனை அடித்ததாகவும், அந்த கோபத்தில், கழிப்பறை மாடியில் துாங்கி கொண்டிருந்த மாதவன் தலை மீது, கல்லை போட்டு சிறுவன் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் சிறுவன் மட்டுமின்றி, மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என, மாதவனின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். கொலை செய்ததாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஆத்திரமடைந்த மாதவனின் உறவினர்கள், சிறுவனின் வீட்டை நேற்று சூறையாடினர். வீட்டிலிருந்த' டிவி' உள்ளிட்ட பொருட்களை வெளியே துாக்கி வீசினர்.

விஷ்ணுகாஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மாதவனின் உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். வீட்டிற்கு வெளியே வீசப்பட்டிருந்த பொருட்களை போலீசார் எடுத்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us