/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்
ADDED : மே 18, 2025 03:10 AM

திருப்போரூர், மே 18--
ஒரகடம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.
திருப்போரூர் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சர்வே எண் 416 / 5எ ல் அரசுக்கு சொந்தமான 15 நிலத்தில், ஐந்து குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன.
இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நேற்று மாலை 3:00 மணிக்கு, பையனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான் தலைமையில், ஒரகடம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி, ஒரகடம் ஊராட்சி தலைவர் முன்னிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 குடிசை வீடுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தில் மதிப்பு 15 லட்சம் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.