/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாங்களத்துாரில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டுகோள்
/
நாங்களத்துாரில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டுகோள்
நாங்களத்துாரில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டுகோள்
நாங்களத்துாரில் புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 24, 2024 09:17 PM

செய்யூர்:செய்யூர் அருகே நாங்களத்துார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, குடியிருப்புப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இதுவே கிராமத்தின் பிரதான குடிநீர் தேக்க தொட்டி. குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, பின் குழாய்களின் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளது.
நாளடைவில் குடிநீர் தேக்க தொட்டி இடிந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி, புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.