/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லான்செட்டி குளத்தை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
நல்லான்செட்டி குளத்தை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 11, 2024 10:49 PM

திருப்போரூர், - திருப்போரூரில், பராமரிப்பின்றி சீரழிந்த நிலையில் உள்ள நல்லான்செட்டிகுளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், திருவஞ்சாவடி தெரு அமைந்துள்ளது. இங்குள்ள கெங்கையம்மன் கோவில் அருகே, நல்லான்செட்டிகுளம் உள்ளது.
இக்குளத்தில், வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாமல் இருக்கும். சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம், கடந்த 10 ஆண்டு களுக்கு முன், படித்துறைகள் மற்றும் கரைகள் அமைத்து சீரமைக்கப்பட்டது. ஆனால், குளத்தை துார் வாரி பல ஆண்டுகள் ஆகின்றன.
தற்போது, குளத்தினுள் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் பாசிகளுடன் குப்பை கழிவுகள் அடர்ந்து காணப்படுகின்றன. குளத்தின் கரைப்பகுதியைச் சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்கின்றன.
எனவே, மேற்கண்ட குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

