sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுகாதார நிலையத்திற்கு காவலாளி நியமிக்க கோரிக்கை

/

சுகாதார நிலையத்திற்கு காவலாளி நியமிக்க கோரிக்கை

சுகாதார நிலையத்திற்கு காவலாளி நியமிக்க கோரிக்கை

சுகாதார நிலையத்திற்கு காவலாளி நியமிக்க கோரிக்கை


ADDED : ஜன 03, 2025 12:50 AM

Google News

ADDED : ஜன 03, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இரவு நேர காவலாளியை பணியமர்த்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், ஞானகிரீஸ்வரன்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு மருத்துவர் மற்றும் பெண் செவிலியர் இங்கு பணியில் உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளதால், இரவு நேரங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூக விரோத செயல்களுக்கு, மருத்துவமனை வளாகப் பகுதியை பயன்படுத்துவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

பெண் செவிலியர்கள் இரவு நேரங்களில் பணியில் உள்ளதால், இரவு நேர காவலாளியை பணியமர்த்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us