sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை

/

மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை

மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை

மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை


ADDED : ஆக 18, 2025 02:10 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு;செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், நத்தம், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், கன மழை பெய்தால் நகரவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய்கள் துார்ந்து உள்ளதால், மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கும். வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழைக்கு முன், செங்கல்பட்டு நகரில் உள்ள மழைநீர் கால்வாய்கள், துார்வாரி சீரமைக்க வேண்டும். இப்பணிகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை, அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us