sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

/

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஆக 27, 2025 10:35 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டுமென, தொழிலாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், 200 ஏக்கரில், சிட்கோ தொழிற்பேட்டை 1982ல் ஏற்படுத்தப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டதால், குறுகிய காலத்திலேயே, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு வந்தன.

தற்போது, இத்தொழிற்பேட்டையில், 32 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஆண்கள், பெண்கள் என, 20,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்த வளாகத்தில் முழுமையான சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. நுழைவாயில் பகுதி உட்பட, ஆங்காங்கே திறந்தவெளி பகுதிகளாக உள்ளன. சில பகுதியில் மின் விளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவில் தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

தொழிலாளர்களின் பாதுகாப்பை கருதி, வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாவலர் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என, தொழிலாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us