sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

/

 அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

 அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

 அஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை


ADDED : டிச 21, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் ஊராட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்த கிராம மக்கள் வெளி ஊர்களுக்கு சென்று வர 1 கி.மீ., நடந்து சென்று சிங்கப்பெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலையில் தென்மேல்பாக்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்றனர்.

பின் அங்கிருந்து சிங்கப்பெருமாள் கோவில், தாம்பரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதே போல கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம் பகுதி பள்ளி மாணவ -- மாணவியர் அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த பேருந்து நிறுத்தம் வந்து செல்கின்றனர்.

பேருந்து நிறுத்ததில் நிழற்குடை இல்லாமல், வெயில் காலங்களில் மரநிழல்களிலும், மழை காலங்களில் நனைந்த படியும் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us