sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவில் வாகன 'பார்க்கிங்' தளத்தில் கான்கிரீட் தரை அமைக்க கோரிக்கை

/

கோவில் வாகன 'பார்க்கிங்' தளத்தில் கான்கிரீட் தரை அமைக்க கோரிக்கை

கோவில் வாகன 'பார்க்கிங்' தளத்தில் கான்கிரீட் தரை அமைக்க கோரிக்கை

கோவில் வாகன 'பார்க்கிங்' தளத்தில் கான்கிரீட் தரை அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 27, 2025 03:30 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலுக்கு விடுமுறை, சுபமுகூர்த்தம், கோவில் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அதேபோல், கோவில் நான்கு மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கும், பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.

கோவில் மற்றும் திருமண மண்டபங்களுக்கு வரும் பக்தர்கள், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நான்கு மாடவீதி சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.

இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே, ஓரளவிற்கு வாகன போக்குவரத்து இடையூறை தவிர்க்க, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு மாடவீதியில் இடத்தை ஒதுக்கி, கட்டண வாகன 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதில், தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கும் வரும் பக்தர்கள், சார் - பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகின்றனர்.

வாகன பார்க்கிங் இடம் மண் தளமாக உள்ள நிலையில், மண் துாசு காற்றி பறப்பதுடன், சில இடங்களில் பள்ளம், மேடாகவும் உள்ளது.

மேலும், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாகவும் மாறி விடுகிறது.

இதனால், வாகனங்களை நிறுத்த மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் இந்த பார்க்கிங் தளத்தில் கான்கிரீட் தரைதளம் அல்லது 'இன்டர்லாக்' கற்கள் அமைத்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us