sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டலம் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

/

தண்டலம் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

தண்டலம் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

தண்டலம் பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 17, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 17, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:தண்டலம் கூட்டு சாலையில் உள்ள பழுதடைந்த பயணியர் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் - சூனாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, தண்டலம் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.

அந்த கூட்டுச்சாலைப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

அங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன் பெற்று வந்தனர்.

தற்போது, உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

அதனால், நிழற்குடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

நிழற்குடையை சீரமைக்க வேண்டி,சித்தாமூர் வட்டார வளர்ச்சி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு, புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

அதே பகுதியில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டித்தர , ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us