sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அருங்குணம் பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

/

அருங்குணம் பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

அருங்குணம் பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

அருங்குணம் பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 19, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:அருங்குணத்தில் சேதமான பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, அருங்குணம் ஊராட்சி உள்ளது. இங்கு, 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம் - மாரிபுத்துார் சாலையில், பயணியர் நிழற்குடை அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

கடந்த ஐந்து ஆண்டு களாக, கட்டடம் பயன்பாடின்றி, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அதனால், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பழைய கட்டடம் உள்ள பகுதி அருகே பயணியர் நிழற்குடை மற்றும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், பயன்பாடின்றி உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை, இடித்து அகற்ற மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us