/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் - நெம்மேலி சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
/
திருப்போரூர் - நெம்மேலி சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
திருப்போரூர் - நெம்மேலி சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
திருப்போரூர் - நெம்மேலி சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 01, 2025 01:57 AM

திருப்போரூர்:திருப்போரூர் -- நெம்மேலி சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் - நெம்மேலி சாலையை திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர், ஆமூர், செம்பாக்கம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள பகிங்ஹாம் கால்வாய்க்கு இடையே, இச்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டதால், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் பிரதான சாலையாக மாறியுள்ளது.
மேலும், இச்சாலை இடையே ஆறுவழிச் சாலையும் செல்கிறது.
இந்த பிரதான சாலையின் அகலம் குறைவாகவும், ஒருவழிச் சாலையாகவும் இருப்பதால், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு மற்ற வாகனங்கள் வழிவிட முடியவில்லை.
மேலும், இச்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளது. சாலையின் இருபுறமும் முட்செடிகளும், பள்ளங்களும் உள்ளன.
அத்துடன், இச்சாலையில் மின்விளக்குகளும் பொருத்தப்படவில்லை. இதனால், இச்சாலையில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால், விபத்துகளும், குற்ற சம்பவங்கள் நடக்கும் சூழல் உள்ளது.
எனவே, இச்சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.