/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகர்-திருக்கச்சூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
மறைமலைநகர்-திருக்கச்சூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
மறைமலைநகர்-திருக்கச்சூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
மறைமலைநகர்-திருக்கச்சூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 08, 2025 12:30 AM

மறைமலைநகர், மறைமலைநகர் -- திருக்கச்சூர் சாலையில், பேரமனுார் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்குச் செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பேரமனுார் சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் திருக்கச்சூர் -- மறைமலைநகர் -- ஆப்பூர் சாலை சந்திப்பு வளைவு உள்ளது.
இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் சேதமான சாலை, கடந்த ஆண்டு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் சாலை வளைவில் அதிவேகத்தில் செல்கின்றன.
இதன் காரணமாக பலர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.