/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டப்பட்டுள்ள ரயில்வே கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
பூட்டப்பட்டுள்ள ரயில்வே கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டப்பட்டுள்ள ரயில்வே கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டப்பட்டுள்ள ரயில்வே கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : ஆக 06, 2025 02:05 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டு மென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
தென் மாவட்டங்களிருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில்கள், விழுப்புரம் -- தாம்பரம் பயணியர் ரயில்கள் என, இரு மார்க்கத்திலும் செல்லும் ரயில்கள், இந்த நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில், பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை, கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.
இதனால், பயணியர் சிறுநீர் கழிக்க கூட இடமின்றி தவித்து வருகின்றனர். ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, இந்த கழிப்பறையை பயணியர் பயன்பாட்டிற்கு திறக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.