sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

/

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை


ADDED : டிச 16, 2024 02:01 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், :செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 21 வது வார்டு வெண்ணாங்குப்பட்டு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது.

இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

மேலும் கோட்டைக்காடு,வேம்பனுார் பகுதியில் இருந்து வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர் இந்த சாலை வழியாக தினசரி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

சாலை கடந்த 15 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர்.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us