sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்

/

செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்

செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்

செய்யூரில் வடிகால்வாய் சீரமைக்க வேண்டுகோள்


ADDED : நவ 09, 2025 05:13 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: செய்யூர் ஊராட்சியில் சேதமான வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக செய்யூர் உள்ளது. வடக்கு செய்யூர், மேற்கு செய்யூர், சால்ட் காலனி, தேவராஜபுரம் பாளையார்மடம், புத்துார் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய செய்யூர் ஊராட்சியில் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால்வாய் வழியாக செல்கின்றன.

மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் மண் துார்ந்து போய் உள்ளதால், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.

இதனால் இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் கழிவு நீர் குடிநீரில் கலந்து நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வடிகால்வாய்களை துார்வாரி சீரமைத்து, கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us