/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெள்ளிமேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
தெள்ளிமேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 27, 2025 11:24 PM

மறைமலை நகர்: தெள்ளிமேட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் தெள்ளிமேடு கிராமத்தில் சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதில் செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில் செல்லும் தடம் எண் 82சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொளத்தூர், தெள்ளிமேடு, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பேருந்தை பயன்படுத்தி ஒரகடம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை 11 ஆண்டுகளுக்கு முன் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த தடத்தில் சாலை ஓரத்தில் இருபுறமும் இருந்த இரண்டு பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.
இதுவரை மீண்டும் நிழற்குடை அமைக்கப்படாதால் பெண்கள், பள்ளி மாணவ - மாணவியர் நீண்ட நேரம் பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

