/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து துவங்க வேண்டுகோள்
/
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து துவங்க வேண்டுகோள்
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து துவங்க வேண்டுகோள்
திருப்போரூரில் வடிகால்வாய் பணி விரைந்து துவங்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 02, 2025 02:21 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மேற்கு புறத்தில் ரவுண்டானா அருகிலிருந்து இந்தியன் வங்கி வரை, வடிகால்வாய் பணியை துவக்கி, விரைந்து முடிக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூரில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை ஆகியவற்றின் விரிவாக்கப் பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் சாலை விரிவாக்க பணி, வடிகால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி, படிப்படியாக முடிக்கப்பட்டு வருகின்றன.
இதில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மேற்கு புறத்தில் ரவுண்டானா அருகிலிருந்து, இந்தியன் வங்கி வரை, இன்னும் வடிகால்வாய் மற்றும் புதிய அணுகு சாலை சீரமைப்பு பணி துவக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சாலையோரத்தில், கரடுமுரடாக உள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள வணிக கடை வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் என, அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஓ.எம்.ஆர்., சாலை மேற்கு புறத்தில், வடிகால்வாய் மற்றும் அணுகு சாலை சீரமைப்பு பணியை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.