/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேலையூரில் சாலை ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற கெடு
/
சேலையூரில் சாலை ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற கெடு
சேலையூரில் சாலை ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற கெடு
சேலையூரில் சாலை ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற கெடு
ADDED : டிச 14, 2025 06:00 AM
சென்னை: சேலையூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் டி.வேம்புலி என்பவர், தாக்கல் செய்த மனு:
சேலையூரில் உள்ள கர்ணம் தெருவில் இருந்து நியூ பாலாஜி நகர் 1வது சாலைக்கு செல்ல, கர்ணம் தெரு இணைப்பு சாலை உள்ளது.
தாம்பரம் நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த இணைப்பு சாலையை, அதே தெருவில் வசிக்கும் குமார் என்பவர் ஆக்கிரமித்து, 2009ல் சுற்றுச்சுவர் கட்டினார்.
இதனால், நியூ பாலாஜி நகர், ரங்கநாதன் தெருவுக்கு செல்ல 3 கி.மீ., வரை, அப்பகுதி மக்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. புகாரின் படி, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், குமார் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
கடந்த செப்.,9ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் நகராட்சி கமிஷனருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கர்ணம் தெரு இணைப்பு சாலை ஆக்கிரமிப்பை அகற்ற, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த் ஆஜராகி, ''ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை விசாரித்த இந்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை மீட்க கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடி க்கை எடுக்க, கடந்த 2017ல் உத்தரவிட்டது.
''அதே நபர், மீண்டும் சாலையை ஆக்கிரமித்துள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பொது சாலை ஆக்கிரமிப்பை, இரு மாதங்களுக்குள் அகற்றும்படி, தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

