ADDED : மே 03, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:-சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில், பாதசாரிகள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
பணி நடைபெற்று வரும் பகுதியில் அதிக வாகனங்கள் சென்று வருவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து தடுப்பு, எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைத்துள்ளனர்.