/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இறந்த சகோதரர் உடலை பார்த்து சகோதரியும் உயிரிழந்த சோகம்
/
இறந்த சகோதரர் உடலை பார்த்து சகோதரியும் உயிரிழந்த சோகம்
இறந்த சகோதரர் உடலை பார்த்து சகோதரியும் உயிரிழந்த சோகம்
இறந்த சகோதரர் உடலை பார்த்து சகோதரியும் உயிரிழந்த சோகம்
ADDED : நவ 11, 2025 11:14 PM

சென்னை: இறந்த சகோதரரின் உடலை பார்த்து கதறி அழுத அவரது அக்கா, திடீரென மயங்கி விழுந்து இறந்தது, உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72. இவரது உடன் பிறந்த சகோதரி வேளாங்கண்ணி தாமஸ், 77.
வின்சென்ட் ஆரோக்கியநாதன், நுங்கம்பாக்கத்தில் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், திடீர் உடல்நலக்குறைவால், வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார்.
அவரது உடல், கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவிலுள்ள உறவினர் வீட்டில், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
தன் சகோதரர் இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே நுங்கம்பாக்கத்தில் இருந்து, கிழக்கு தாம்பரத்திற்கு வந்தார்.
அங்கு, தம்பியின் உடலைப் பார்த்து கதறி அழுத போது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார். சகோதரர் இறந்த துக்கத்தில் சகோதரியும் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

