sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்

/

மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்

மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்

மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் மறைமலைநகரில் நோய் பரவும் அபாயம்


ADDED : ஏப் 10, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில், மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் கீழக்கரணை, பேரமனுார், தர்னீஸ்கொயர், திருக்கச்சூர், செங்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புறநகரில் வளர்ந்து வரும் பகுதி என்பதால், புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய்கள் வழியாக அருகில் உள்ள நீர்நிலைகளில் நேரடியாக கலக்கிறது.

இந்த கால்வாய்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்து துார் வாரப்படாததால், கால்வாய்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த பகுதிகளில் கொசுக்கள் அதிகரித்து, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்களை முறையாக துார் வாரி, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us