sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறு

/

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறு

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறு

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விறுவிறு


ADDED : ஜன 06, 2025 02:26 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 10 வது வார்டுக்கு உட்பட்ட நேரு நகர், 2வது குறுக்கு தெரு பகுதியில், 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லை.

இதனால், மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற முடியாமல், சாலையில் தேங்கி நின்றது.

இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி 10 வது வார்டு கவுன்சிலர் அகிலா மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் புகார் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், நிரந்தர தீர்வாக, 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ், 2023-- 24 நிதியாண்டில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 170 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி, கடந்த இரண்டு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது.

பருவ மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணி, மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us