sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் சென்னையில் நாளை விழா

/

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் சென்னையில் நாளை விழா

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் சென்னையில் நாளை விழா

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் சென்னையில் நாளை விழா


ADDED : நவ 12, 2024 07:20 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:தமிழகம் முழுதும், மாவட்டந்தோறும் சிறந்த மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு கேடயம் வழங்க, தொடக்க கல்வி இயக்குனர், கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், புழுதிவாக்கம் நடுநிலைப்பள்ளி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில், ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

இப்பள்ளிகள், கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகை மற்றும் புதிய மாணவர் சேர்க்கையில் சிறந்து விளங்குகின்றன.

இந்த கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளாக, மேற்கூறிய மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார்.

அவற்றில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, அவற்றுக்கு கேடயங்கள் வழங்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதற்கான விழா, சென்னை சந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 14ம் தேதி காலை 8:00 மணிக்கு நடக்கிறது.






      Dinamalar
      Follow us