sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி

/

 தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி

 தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி

 தொக்கீஸ்வரர் கோவில் குளம் கனமழையிலும் நிரம்பாததால் அதிர்ச்சி


ADDED : டிச 05, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியம்பாக்கம்: 'டிட்வா' புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழைக்கு, வில்லியம்பாக்கம் தொக்கீஸ்வரர் கோவில் குளம் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமத்தின் மையப்பகுதியில், பழமையான சொர்ணாம்பிகை சமேத தொக்கீஸ்வர் கோவில் அமைந்துள்ளது.

கோவிலின் முன்பக்கத்தில், திருக்குளம் உள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழைக்கு, இந்த குளத்தில் சிறிதளவு தண்ணீரே தேங்கியுள்ளது.

குளத்திற்கு மழைநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாததால், குளத்தில் நீர் தேங்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கனமழையால், இதே பகுதியில் வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில் உள்ள நீஞ்சல்மடுவில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலக்கிறது.

ஆனால், கோவில் திருக்குளம் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன மழைக்கே இந்த குளம் நிரம்பாததால், கோடை காலங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த குளம் மற்றும் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us