/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆகாய தாமரை படர்ந்துள்ள சிலாவட்டம் கோவில் குளம்
/
ஆகாய தாமரை படர்ந்துள்ள சிலாவட்டம் கோவில் குளம்
ADDED : ஜன 19, 2024 01:21 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் ஊராட்சியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அய்யனார் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது.
மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. தண்ணீரில் பாசி படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அய்யனார் கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.
எனவே, குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, குளக்கரை பகுதிகளில் நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், கழிவுகளை அகற்ற துறைச் சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

