/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
/
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு
ADDED : டிச 16, 2025 04:21 AM
சித்தாமூர்: சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில், குடிநீர் வசதி இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.
சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
சித்தாமூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.
செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் செல்ல தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அங்கு காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

