sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

/

 சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

 சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு

 சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதியின்றி தவிப்பு


ADDED : டிச 16, 2025 04:21 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில், குடிநீர் வசதி இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.

சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

சித்தாமூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.

செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்குச் செல்ல தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அங்கு காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us