sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்

/

தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்

தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்

தடுப்புகள் இல்லாத சிறுபாலம் கீழக்கரணையில் விபத்து அபாயம்


ADDED : ஜன 23, 2025 12:38 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டு, காமராஜர் சாலை -- கீழக்கரணையில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த சாலை வழியாக, மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் சுற்றியுள்ள சித்தமனுார், பெரிய செங்குன்றம் உள்ளிட்ட கிராம மக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில், அம்மன் கோவில் அருகே வளைவில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறு கால்வாய் உள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின் இருபுறமும், எந்தவித தடுப்புகளும் இல்லை.

அதனால், சாலை சந்திப்பு வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.

அதேபோல், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடும் போதும், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us