sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திடக்கழிவு மேலாண்மை கூடம் சூணாம்பேடு ஊராட்சியில் அவசியம்

/

திடக்கழிவு மேலாண்மை கூடம் சூணாம்பேடு ஊராட்சியில் அவசியம்

திடக்கழிவு மேலாண்மை கூடம் சூணாம்பேடு ஊராட்சியில் அவசியம்

திடக்கழிவு மேலாண்மை கூடம் சூணாம்பேடு ஊராட்சியில் அவசியம்


ADDED : ஏப் 14, 2025 11:53 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்க, மேலாண்மைக் கூடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பாக்கம், காவனுார், வில்லிப்பாக்கம், இல்லீடு போன்ற கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

குப்பை அதிகம் தேங்கும் இடங்களில் ஊராட்சி நிர்வாகத்தினர், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், குப்பை தொட்டிகள் அமைத்து, அதில் தேங்கும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றி வருகின்றனர்.

பொதுமக்கள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.

மட்காத குப்பையில் இருந்து, மறுசுழற்சிக்குத் தேவையான பொருட்கள் பிரித்தெடுக்கவும், மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கவும், துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பொதுமக்கள் குப்பையை தரம் பிரித்து வழங்காததாலும், ஊராட்சியில் முறையான திடக்கழிவு மேலாண்மை கூடம் இல்லாததாலும், சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்படாமல், ஒரே இடத்தில் கொட்டப்படுகிறது.

இதனால் மழைக்காலங்களில் குப்பை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகள் மாசடைகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம், சூணாம்பேடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைத்து, குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us