sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை

/

செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை

செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை

செல்வமுத்து குமார சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசை


ADDED : அக் 27, 2025 11:27 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் செல்வமுத்து குமார சுவாமி கோவிலில், நேற்று மாலை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

மறைமலை நகர் நகராட்சி, 'என்.எச் -2' பகுதியில் பழமையான செல்வமுத்து குமார சுவாமி கோவில் உள்ளது.

இங்கு கடந்த 22ம் தேதி, கந்தசஷ்டி பெருவிழா நிகழ்ச்சி துவங்கியது.

தினமும் மூலவர் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம், கந்தப்பெருமான் மயில் மேல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு, முத்துகுமாரசாமி ஹோமம், சண்முக அலங்காரம், ஏகதின லட்ச்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு, முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும், மஹா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிமையாக நடந்தது.

இதில் மறைமலை நகர் மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், நாளை காலை 10:00 மணிக்கு திருத்தேர் வீதி உலாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us