sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரேஷன் கார்டு திருத்தம் வரும் 14ல் சிறப்பு முகாம்

/

ரேஷன் கார்டு திருத்தம் வரும் 14ல் சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் வரும் 14ல் சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் வரும் 14ல் சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 11, 2025 09:14 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய, வரும் 14ம் தேதி, சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடைபெறுகிறது.

கீழ்க்கண்ட கிராமங்களில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும் 14ம் தேதி, சனிக்கிழமை நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தாலுகா கிராமம்


செங்கல்பட்டு தைலாவரம்
மதுராந்தகம் அல்லுார்
செய்யூர் பரசநல்லுார்
திருக்கழுக்குன்றம் அழகுசமுத்திரம்
திருப்போரூர் ஆமூர்
வண்டலுார் புதுப்பாக்கம்








      Dinamalar
      Follow us