sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

/

திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

திருநங்கைகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 06, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், திருநங்கையருக்கு அரசு உதவிகள் பெற அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், வரும் 24ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கையருக்கு, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க, ரேஷன் கார்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன.

மாவட்ட அளவில், ஒரே இடத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிவற்றை வழங்கும் அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

அதன்படி இதற்கான சிறப்பு முகாம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதை, திருநங்கையர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us