/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறப்பு எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
/
சிறப்பு எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
ADDED : நவ 28, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, சித்தாலப்பாக்கம், சி.பி.ஓ.ஏ., காலனி, மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 53; சிறப்பு எஸ்.ஐ., இவர், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த நிலையில், இம்மாதம் 18ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
நேற்று அதிகாலை, தன் வீட்டில் சிறு கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட குடும்பத்தினர், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக, பெரும்பாக்கம் போலீசார் கூறினர்.

