/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களுடன் ஸ்டாலின்' அகிலி ஊராட்சியில் சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' அகிலி ஊராட்சியில் சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' அகிலி ஊராட்சியில் சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' அகிலி ஊராட்சியில் சிறப்பு முகாம்
ADDED : அக் 29, 2025 12:28 AM

அச்சிறுபாக்கம்: அகிலி ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், நடந்தது.
அகிலி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலையில், அகிலி மற்றும் மாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
நேற்று, நடந்த முகாமில், 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

