sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடிநீர் திட்டம் இரு மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை

/

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடிநீர் திட்டம் இரு மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடிநீர் திட்டம் இரு மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை

பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடிநீர் திட்டம் இரு மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை


ADDED : ஜூலை 30, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடிநீர் திட்டத்தில், முதல் கட்ட பணிகள் முடிந்து, பெருங்களத்துார் பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவங்க உள்ள நிலையில், பீர்க்கன்காரணை பகுதிக்கான இரண்டாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அவை பேரூராட்சியாக இருந்த போது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, ராஜிவ்காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில், பாலாறு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

அப்போது, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதியில் வசிப்போர், இந்த இடங்களில் பாலாறு தண்ணீரை பிடித்து, குடிநீராக பயன்படுத்தி வந்தனர். அருகேயுள்ள பகுதிகளில் வசிப்போரும் அங்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த பாலாறு குடிநீர் வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது, உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் இணைக்கப்பட்டதால், மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக பாலாறு குழாய் செல்வதால், அதிலிருந்து இணைப்பு எடுத்து, தொட்டிகளில் நிரப்பி, இப்பகுதிகளுக்கு வினியோகிக்கும் திட்டத்தில், முதல் கட்டமாக, 98 லட்சம் ரூபாய் செலவில், பெருங்களத்துார் பகுதிக்கான பணி, 2025, பிப்., மாதம் துவங்கியது.

இதில், குழாய் பதிக்கும் பணி முடிந்து, பிரதான குழாயுடன் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு சில நாட்களில் அப்பணியும் முடிக்கப்பட்டு, பார்வதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் துவங்கும் என, தெரிகிறது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக, பீர்க்கன்காரணை பகுதிக்கு, மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரில் இருந்து சக்தி நகர், ஏ.எஸ்.ராஜன் நகர் வழியாக குழாய் பதிக்கும் பணி துவங்கியுள்ளது.

இரண்டு மாதங்களில் இப்பணிகளையும் முடித்து, அப்பகுதிக்கும் பாலாறு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us