/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் கார் மோதி ஸ்வீட் மாஸ்டர் பலி
/
மறைமலைநகரில் கார் மோதி ஸ்வீட் மாஸ்டர் பலி
ADDED : ஏப் 24, 2025 09:16 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 55.
இவர், பல்லாவரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
ரவி தினமும், மெல்ரோசாபுரம் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.நேற்று காலை வழக்கம் போல, பேருந்திற்காக ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் சென்ற 'நிசான்' கார், ரவி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் ரவியின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கார் டிரைவரான கோயம்பேடு, சேமத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கலையரசன், 31, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.