ADDED : நவ 08, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லுாரியில், உயர்கல்வித்துறை சார்பில், 'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறப்பு சொற்பொழிவாளராக ஆண்டாள் பிரியதர்ஷினி பங்கேற்று, 'நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே' என்ற தலைப்பில் பேசினார்.
இதில், திருப்போரூர் தாசில்தார் சரவணன், பல்வேறு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

