sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா

/

பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா

பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா

பராமரிப்பின்றி சீரழிந்துள்ள மேடவாக்கம் சிறுவர் பூங்கா


ADDED : ஏப் 28, 2025 04:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்,:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்கு அமைந்துள்ள காயத்ரி நகரில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டன் சிறுவர் பூங்கா, பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

இது, கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதர் மண்டி சீரழிந்துள்ளது. விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.

மின் விளக்குகளும் இல்லை. இதனால், சிறுவர் மற்றும் நடைபயிற்சி செய்வோர், இப்பகுதியில் வேறு பூங்கா இன்மையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி செயலர் கூறியதாவது:

ஊராட்சியில் உள்ள பூங்காக்களை சுற்றி மின் விளக்குகள், நடைபாதை அமைத்து பராமரிக்க, போதிய அளவு நிதி இல்லை. அதனால், எங்களால் பராமரிக்க இயலவில்லை.

பராமரிப்பு தொகை ஒதுக்கப்பட்டால், குறிப்பிட்ட பணிகளை முடித்து, விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us